ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் களுத்துறை தெற்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை ஹென்டியங்கல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், சம்பவத்தன்று வீடு மற்றும் வீட்டு காணிக்குள் நுழைந்து, சொத்துக்களை திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒரு வருடத்திற்கும் மேலாக நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

பிள்ளையானின் கடத்தலில் புதிய சர்ச்சை! தீவுச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவீந்திரநாத்தின் மர்மம் (VIDEO)

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
