பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ள ஜனாதிபதி
பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினை ஒரு வாரத்தில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் நிமித்தம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.பி சந்திரகுமார்
ரணில் எடுத்த தீர்மானம்
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும், செப்டம்பரில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார்
முன்னதாக தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மனுதாரர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam