வவுனியாவில் சீரற்ற காலநிலை: 10 வீடுகள் சேதம்
வவுனியாவில் பெய்த கடும் மழை மற்றும் காற்றினால் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் அழிவடைந்துள்ளன.
வவுனியாவில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வவுனியா இராசேந்திரங்குளம், சூடுவெந்தபுலவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், சில வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை அரபாத் நகர்ப் பகுதியில் வீசிய கடும் காற்றினால் செய்கை பண்ணப்பட்டிருந்த வாழை மற்றும் பப்பாசி போன்ற பயிர்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களைச்
சேகரித்து வருகின்றனர்.




யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri