நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video)
இஸ்லாமியர்கள் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான்று கொண்டாடப்படும் ஈகைத் திருநாளான நோன்பு பெருநாளினை உலக வாழ் இஸ்லாமிய மக்கள் இன்று (22.04.2023) கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு யாழ்.பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றது.
யாழ்.பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் மெளலவி ஆர்.எச்.ஆஹிக் ஜமால் தலைமையில் தொழுகை நடைபெற்றது.
இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த இஸ்லாமியர்கள் துவா,குப்தா பிராத்தனையில் ஈடுபட்டனர்.
மலையகம்
ரமழான் பண்டிகையை முன்னிட்டு மலையகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று நோன்பு பெருநாள் தொழுகைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை மௌலவி சாஜகான் தலைமையில் இன்று காலை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றது.
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பெரு மக்கள் இன்று காலை முதல் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவமளித்து பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்த பெருநாள் தொழுகையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டி துவா தொழுகையும் இடம்பெற்றது.
குறித்த பெருநாள் தொழுகையின் போது பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி-மலைவாஞ்சன்,திருமாள்
அம்பாறை
புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (22) காலை நடைபெற்றது.
இதன்போது அஷ்செய்க் ஏ.ஆர் நுவீஸ் (மக்கி) தொழுகை நடத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-பாறுக் ஷிஹான்
வவுனியா
வவுனியாவில் நகர பள்ளிவாசல் உட்பட பல்வேறு பகுதிகளில் நோன்பு பெருநாள் விசேட தொழுகை இன்று இடம்பெற்றிருந்தது.
இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்றையதினம் வவுனியா பட்னிச்சூர் முஹிய்ப்த்தீன் பள்ளிவாசலில் காலை 7.10 மணிக்கு விசேட தொழுகை இடம்பெற்றது.
பள்ளிவாசலின் பிரதான மௌலவி அலாவுதீனால் விசேட தொழுகை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், பெருந்திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தங்களுக்குள் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் வவுனியாவில் அனைத்து பள்ளிவாசல்களிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
செய்தி-திலீபன்
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் நோன்பு பெருநாள் தொழுகைகள் கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றன.
ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் தொழுகைகள் இடம்பெற்றன.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசலுக்கு சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
பெருநாள் தொழுகைகளை பேஷ் இமாம் ஏ.ஆர்.ஜவாஹிர் மௌலவி நிகழ்த்தினார்.
பள்ளிவாசலுக்கு வெளியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
செய்தி-முபாரக்
புத்தளம்
நோன்புப் பெருநாள் தொழுகை புத்தளம் கருத்தரவை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது.
குறித்த பெருநாள் தொழுகை இமாம் மின்ஹாஜினால் தொழுவிக்கப்பட்டது.
இந்த பெருநாள் தொழுகையில் அதிகளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது பொலிஸாரினால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டமையும் காணக்கூடியதாக
இருந்தது.
செய்தி-அஷார்
மட்டக்களப்பு
நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில் இன்று (22.04.2023) ஈடுபட்டனர்.
இதனடிப்படையில் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலாள பெருநாள் தொழுகை இன்று காலை 06.45 மணிக்கு வாழைச்சேனை அந் நூர் தேசியபாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் பேஷ்இமாம் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸம்மில் நடத்தினார்.
செய்தி-நவோஜ்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் சனிக்கிழமை(22) நோன்பு பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30
மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.
செய்தி-ஆஷிக்
ஏறாவூர்
புனித நோன்பு பெருநாள் தொழுகை ஏறாவூரில் திடல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை (22.04.2023) இடம்பெற்றது.
ஏறாவூர் அல் மர்க்கஸில் இஸ்லாமி அமைப்பினரால் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மைதானத் தொழுகைக்காகவென ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.
நிகழ்வில் தொழுகையும் பிரச்சாரமும் இடம்பெற்றது.
செய்தி: ருசாத்




கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
