பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி அணி திரளும் மக்கள் படையுடன் பளை பிரதேசத்தை வந்தடைந்தது
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி பேரணி பளை பகுதியை வந்தடைந்தது.
மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண் அதிரும் கோசங்களோடு சிங்கள பேரினவாத அரசுக்கும் , பௌதீக மேலாண்மை ஆட்சியான தமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என உரக்க சொல்லும் செய்தியாகவே அறவழி போராட்டம் இறுதியாக யாழ். நோக்கி நகர்கின்றது.
தமிழ் பேசும் சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் தாயகத்தில் பேரெழுச்சியுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டமானது இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை அடைந்து பெரும் எழுச்சியுடன் முடிவிற்கு வரவுள்ளது.
இந்த நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஐந்தாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியானது வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.





இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து