பேரணி நடத்தி எம்மை அச்சுறுத்தவே முடியாது! மக்கள் படை எம்பக்கம் - ரில்வின் சில்வா சூளுரை
அரசை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில், அரசை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம்வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விஹாரமஹாதே வி திறந்த வெளியரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசுக்கு எதிராகப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் மேற்படி அறிவிப்பை ரில்வின் சில்வா வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

கொழும்பு சுற்றிவளைப்பு
"ஆட்சியைக் கவிழ்ப்பது பற்றியும், கொழும்பைச் சுற்றிவளைப்பது குறித்தும் தற்போது கதைக்கின்றனர். அவர்களின் நகர்வுகள் எமக்குச் சவால் அல்ல. எப்படி போராட்டம் நடத்த வேண்டும், எப்படி பேரணி நடத்த வேண்டும் எனச் செய்து காட்டியவர்கள் நாம்.
எனவே, 3000 ,4000 பேரைத் திரட்டி எம்மை மிரட்ட முடியாது. பேரணி பார்க்க வேண்டுமானால் நாமும் நடத்திக் காட்டுகின்றோம்.
அரசைக் கவிழ்ப்பதற்காக 5 ஆயிரம் பேரைத் திரட்ட முடியுமென்றால் பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கும் வல்லமை எமது அரசியல் அணிக்கு உள்ளது. எனவே, எம்முடன் விளையாட வரவேண்டாம்." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam