ரணில் அரங்கேற்றிய நாடகம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
பேச்சுவார்த்தை என்ற நாடகத்திற்கு அழைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ஒரு நாடகத்தை தான் அரங்கேற்றியிருந்தார். அதாவது தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பேச்சுவார்த்தை என்ற நாடகத்திற்கு அழைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏமாற்றியிருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போதே ஒரு செயற்பாட்டாளராக நாம் அதனை கடுமையாக எதிர்த்திருந்தோம்.
அதாவது ரணிலின் நாடகத்தில் ஒரு கதாபாத்திரமாக நாம் மாறிவிடக்கூடாது என நாம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணிவாக கேட்டிருந்தோம். ஆனாலும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
