ரணில் அரங்கேற்றிய நாடகம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
பேச்சுவார்த்தை என்ற நாடகத்திற்கு அழைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ஒரு நாடகத்தை தான் அரங்கேற்றியிருந்தார். அதாவது தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பேச்சுவார்த்தை என்ற நாடகத்திற்கு அழைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏமாற்றியிருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போதே ஒரு செயற்பாட்டாளராக நாம் அதனை கடுமையாக எதிர்த்திருந்தோம்.
அதாவது ரணிலின் நாடகத்தில் ஒரு கதாபாத்திரமாக நாம் மாறிவிடக்கூடாது என நாம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணிவாக கேட்டிருந்தோம். ஆனாலும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri