நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை

Climate Change Northern Province of Sri Lanka Weather
By Independent Writer Nov 26, 2024 05:51 AM GMT
Independent Writer

Independent Writer

in இயற்கை
Report

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 2035 குடும்பங்களை சேர்ந்த 7416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இந்த சீரற்ற காலநிலை காரணமாக, 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது . சாவகச்சேரி, ஊர்காவல்துறை, உடுவில், கோப்பாய் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, சங்கானை, காரை நகர், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

செய்தி - கஜி, தீபன், ராகேஷ்

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


மேலும் மாவட்டத்தில் 16 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.உயர் தர பரீட்சைக்கான மத்திய நிலையங்கள் இல்லாத பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள்,பொது மண்டபங்கள் இவ்வாறு தற்காலிக பாதுகாப்பு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து கடற்றொழிலாளர்களை மறு அறிவித்தல் வரை கடற்தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செய்தி - ஆஷிக்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டார வன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தாெடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில் உள்ள மக்களை அயலிலுள்ள பாடசாலைக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல் விடுத்துள்ளனர்.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை | Rain Warning Weather Forecast Northern Province

குறித்த பகுதியில் அனர்த்த கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து குறித்த கிராம மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடதக்கது.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை | Rain Warning Weather Forecast Northern Province

 மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் நந்திக்கடல் நீர் ஏரியும் சாலை கடல் நீரேரியும் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன

செய்தி - சதீசன்

வவுனியா

ஒமந்தை, பாலமோட்டை பகுதியில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் உடைப்பெடுத்தமையால் இக்குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளது.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை | Rain Warning Weather Forecast Northern Province

வவுனியாவில் தொடந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஓமந்தை, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அக் குளத்தின் கீழான 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளதுடன், அப் பகுதிக்கான வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

செய்தி - திலீபன்

நுவரெலியா

நாட்டில் வானிலை சீற்றத்தினால் கடந்த இரு தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது

எனினும் நேற்று (25) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை | Rain Warning Weather Forecast Northern Province

குறிப்பாக கந்தபளை , ஹைபொரஸ்ட், ரேஸ்கோஷ் குடிருப்பு , பம்பரகலை மற்றும் நானுஓயா பகுதிகளில் பெய்யும் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்தோடு குறித்த பிரதேசங்களை அண்டிய வீடுகளில் புகுந்த வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. 

தீர்வுத்திட்டம் குறித்து தமிழ் கட்சிகளுடன் பேச கஜேந்திரகுமார் எம்.பி அழைப்பு!

தீர்வுத்திட்டம் குறித்து தமிழ் கட்சிகளுடன் பேச கஜேந்திரகுமார் எம்.பி அழைப்பு!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Paris, France

30 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Scarborough, Canada

27 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US