தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவு
தொடருந்து நிலைய அதிபர்கள் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது.
பணிப்புறக்கணிப்பு
நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தங்களுடைய பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்காவிடின் அடுத்த வாரம் தங்களது சங்கத்தினர் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றும் இன்றும் தபால் தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன், தூர இடங்களுக்கான தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam