தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் திடீர் பணிப்புறக்கணிப்பு: மக்கள் அதிருப்தி
நாடளாவிய ரீதியில் நேற்று (09) நள்ளிரவில் இருந்து தொடருந்து நிலைய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக நானுஓயா தொடருந்து நிலையம் மூடப்பட்டு இராணுவத்தினரும் அதிகமான பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடருந்து பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
சிரமத்தில் மக்கள்
குறிப்பாக அதிகமான சுற்றுலா பயணிகள் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்து மீண்டும் திரும்பி செல்கின்றனர்.

இதனால், நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேவேளை, நேற்று (09) பிற்பகல் 12:45 இற்கு கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி புறப்பட்ட தொடருந்து ஒன்று நானுஓயா தொடருந்து நிலையத்திலேயே சேவைகளை இரத்தச் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam