தொடருந்து சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு
பல பாதைகளில் தற்போதுள்ள தடைகள் காரணமாக, தொடருந்து திணைக்களம் இன்று (01) திருத்தப்பட்ட தொடருந்து நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, பிரதான பாதையில் 19 தொடருந்து சேவைகள் இயங்கும்.
இருப்பினும், தடைகள் காரணமாக, இந்த தொடருந்துகள் கொழும்பு கோட்டைக்கும் அம்பேபுஸ்ஸவிற்கும் இடையில் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 தொடருந்து சேவைகள்
மேலும் அம்பேபுஸ்ஸவிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும். கரையோரப் பாதையில் 34 தொடருந்து சேவைகள் திட்டமிட்டபடி இயங்கும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, புத்தளம் பாதையில் 18 தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதுடன், குறித்த தொடருந்து சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை வரை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், களனிவெளி மார்க்கத்தில் 10 தொடருந்து சேவைகளை இயக்கவும் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri