யாழில் திடீர் சோதனை நடவடிக்கை : அறுவர் கைது
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் இன்றையதினம்(24.10.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு பேரிடமிருந்தும் எழு கிராம் ஹெரோயின் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படும் நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரின் இன்றைய திடீர் சோதனையின் போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சந்தேக நபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும் ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |