அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி
அமெரிக்காவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில், குயின்ஸில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் பலத்த காயமடைந்த மேலும், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்
இந்நிலையில் கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தகவல் வழங்கியுள்ளது.
சம்பவத்தில் 11 வயது சிறுமி, 12 வயது சிறுவன், 44 வயதுடைய பெண் மற்றும் 30 வயதுடைய ஆண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri
