மறைந்த எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திய ரணில் - செய்திகளின் தொகுப்பு (Videos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோருடன் ஜனாதிபதி மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி இலங்கையில் இல்லாத காரணத்தினால், அவரது அமைச்சு பொறுப்புக்களை நிர்வகிக்க இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,