வாகன விபத்தில் சிக்கி ஒருவர் பலி
பேலியகொடை - புத்தளம் வீதியில் கொடவெல சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதிய விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து புத்தளம் - மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடை - புத்தளம் வீதியில் கொடவெல சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பேலியகொடையில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் வலது புறம் திரும்பும் போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்று, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லொறியின் சாரதி கைது
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam