கொழும்பு புறநகர் பகுதி ஒன்றில் பணத்திற்காக பறிக்கப்பட்ட உயிர்
கொழும்பு புறநகர் பகுதி ஒன்றில் பணத்திற்காக வயோதிப் பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கொட்டாவ மாலம்பே வீதி இலக்கம் 720 இல் வசிக்கும் டொன லீலா அபேரத்ன என்ற 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
குறித்த வயோதிபப் பெண் வீட்டில் தனிமையிலிருந்த போது சந்தேக நபர் வீட்டுக்கு சென்று வயோதிபப் பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகை இல்லை என்று வயோதிபப் பெண் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஆனைமடு, நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பதுடன் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான வியாபாரத்தில் தொழிலாளியாக பணியாற்றியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam