உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல மாட்டேன்! புடின் வழங்கியுள்ள உறுதிமொழி-செய்திகளின் தொகுப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல மாட்டேன் என உறுதிமொழி பெற்றதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
ஐந்து மணிநேர நேர்காணலில், பல விடயங்களை கூறிய பென்னட், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியைக் கொல்ல விரும்புகிறீர்களா என்று புடினிடம் கேட்டதாகக் கூறியுள்ளார்.
அதற்கு புடின் 100 சதவீதம் நான் ஸெலென்ஸ்கியைக் கொல்ல மாட்டேன் எனகூறியதாக அவர் கூறினார்.
மேலும், இந்த புடினின் உறுதிமொழியை ஸெலென்ஸ்கி அறிந்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும் புடின் ஒரு நிபுணத்துவ பொய்யர் என்று கருத்து தெரிவித்தார்.
‘கடந்த காலங்களில், புடின் கிரிமியாவை ஆக்கிரமிக்க மாட்டோம், மின்ஸ்க் ஒப்பந்தங்களை மீற மாட்டோம், உக்ரைனை ஆக்கிரமிக்க மாட்டோம் என்று வாக்குறுதிகளை அளித்துள்ளார், இருப்பினும் அவர் இந்த விடயங்களைச் செய்தார். ஏமாறாதீர்கள். ஒவ்வொரு முறையும் அவர் எதையும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்து பின்னர் அவர் அதை செய்வார் என’ கூறியுள்ளார்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
