அம்பலமானது உக்ரைனின் புதிய திட்டம்: ரஷ்யாவில் பரபரப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சிவப்புக் கோடுகளில் ஒன்றைக் கடக்கும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் ஒன்று ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட விளாடிமிர் புடினின் மாஸ்கோ அரண் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரித்துவருவதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி
ரஷ்யாவின் முன்னாள் துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ஃபெடோரோவ் என்பவரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி.அது முயற்சியல்ல திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கும்.
அது விளாடிமிர் புடினின் சிவப்புக் கோட்டினை கடக்கும் செயல்.தமது முதன்மை நகரங்களை காக்க புடினால் முடியாமல் போகும்.
முழு அளவிலான உலகப் போர்
உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முழு அளவிலான உலகப் போராக மாற்றுவதற்கும் புடின் திட்டமிட்டு வருவதாக அவர் சந்தேகம் உள்ளது.
உக்ரைனுக்கு அனுப்பிய வீரர்களில் சரிபாதி அளவுக்கு ரஷ்யா இழந்துள்ளதுடன், உக்ரைன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 400,000 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களால் இனி போரிட முடியாது.”என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பினை, உக்ரைன் இதுவரை தடுப்பாட்டத்தால் தான் எதிர்கொண்டு வந்துள்ளது.
மேலும், ரஷ்ய தாக்குதல் வியூகங்களை விடவும் உக்ரைனின் தந்திரங்கள் மெச்சும்படியாக இருந்தது என போர் தொடர்பான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
