ரஷ்யா விட்ட தவறு! ஆண்டுகளுக்கு பின்னர் வருத்தம் வெளியிட்ட புடின்
ரஷ்யா தனது உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தகுந்த ஆயத்தங்களுடன் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இன்று (19.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்குவதற்கு முன்னர் முறையான திட்டமிடலை ரஷ்யா மேற்கொண்டிருக்க வேண்டும் என புடின் இதன்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு
ரஷ்யா 2014இல் கிரிமியாவை உக்ரைனிலிருந்து கைப்பற்றிய நேரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவான படைகள் உக்ரைனில் மோதலை ஆரம்பித்திருந்தன.
எனினும், 8 ஆண்டுகள் கடந்த பின்னரே உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை புடின் தொடங்கியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், தற்போது போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சமாதான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
