ரஷ்யா விட்ட தவறு! ஆண்டுகளுக்கு பின்னர் வருத்தம் வெளியிட்ட புடின்
ரஷ்யா தனது உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தகுந்த ஆயத்தங்களுடன் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இன்று (19.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்குவதற்கு முன்னர் முறையான திட்டமிடலை ரஷ்யா மேற்கொண்டிருக்க வேண்டும் என புடின் இதன்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு
ரஷ்யா 2014இல் கிரிமியாவை உக்ரைனிலிருந்து கைப்பற்றிய நேரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவான படைகள் உக்ரைனில் மோதலை ஆரம்பித்திருந்தன.
எனினும், 8 ஆண்டுகள் கடந்த பின்னரே உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை புடின் தொடங்கியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், தற்போது போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சமாதான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
