மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் வைத்தியசாலையில்
புதுக்குடியிருப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி இருவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயது மதிக்கதக்க பெண் மற்றும் சிவநகரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞனுமே காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
