லொஹானுடன் சம்பவ இடத்தில் இருந்தாரா புஷ்பிகா? அவரே தெரிவித்துள்ள விடயம்
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறைச்சாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது இலங்கையின் திருமதி அழகு ராணியான புஷ்பிகா டி சில்வாவும் அங்கு இருந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் புஷ்பிகா டி சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த தகவலை மறுத்து அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
அத்துடன், சம்பவ இடத்தில் தான் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் மாத்தறையில் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam