டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதல் : பஞ்சாபிற்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு
புதிய இணைப்பு
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றியிலக்காக 175 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பின், மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் அரங்கில் இடம்பெறும் இன்றைய இரண்டாவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
மேலும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி சார்பில் அபிஷேக் போரல் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் 06 ஓவர் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.
முதலாம் இணைப்பு
17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி பஞசாப் கிங்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி மோதுகின்றது.
குறித்த போட்டியானது, பஞ்சாப்பின், மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் அரங்கில் இன்று (23.03.2024) நடைபெற்று வருகின்றது.
இதன்படி, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
ஆட்டமிழப்பு
இந்நிலையில், டெல்லி கெப்பிட்டல்ஸ் 10 ஓவர்கள் நிறைவில் 86 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
களத்தில் ஷாய் ஹோப் 26 ஓட்டங்களுடனும் ரிஷப் பந்த் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
