புங்குடுதீவு - கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்
புங்குடுதீவு - கண்ணகி அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மகா கும்பாபிஷேக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் அறிவித்துள்ளார்.
அதன்படி, புங்கையூரில் வீற்றிருந்து உலகலெல்லாம் பரந்துவாழும் எம்மை வளமுடன் வாழவைக்கும் நாயகி ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மகாயாக மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 25.06.2023 அன்று நடைபெறவுள்ளது.
அன்னையின் பெரு விழா
இதற்கான கிரியைகள் எதிர்வரும் (19.06.2023) ஆம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது.
மேலும், எண்ணைக் காப்பு நிகழ்வானது எதிர் வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரையும் நடைபெறவுள்ளது.
24ஆம் திகதி காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை நடைபெறும்.
எனவே அம்பிகை அடியார்களாகிய உங்களை அன்னையின் பெரு விழாவில் பங்கு பற்றி அன்னையின் அருளைப் பெறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |