அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி

Mullaitivu Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Apr 16, 2024 10:32 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

புல்மோட்டை நோக்கிய பயணத்திற்கான வீதியொன்றில் பயணிக்கும் பயணிகள் பாரிய போக்குவரத்துச் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பகுதிகளில் புல்மோட்டை வீதியின் துயரமும் ஒன்றாகித் தொடர்வதாக அந்த பாதையினை பயன்படுத்தி வரும் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

புல்மோட்டை வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிக்கும் போது தென்னமரவடிக்கு திரும்பும் சந்தியில் இருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் திசையில் திரும்பி 3 கிலோமீற்றர் தூரம் கிரவல் பாதைவழியே பயணிக்க வேண்டியுள்ளது.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி | Pulmottai Road Issue

இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் முல்லைத்தீவில் இருந்து பயணிக்கும் பயணிகள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும திடீர் மரணம்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும திடீர் மரணம்

வீதியபிவிருத்தித் திணைக்களம் இது தொடர்பில் காட்டிவரும் அக்கறையற்ற போக்கு மக்களுக்காக என உள்ள அரசாங்கத்தின் மீது கோபம் எழுவதாக ஜனகபுரம், சப்பத்நுவர பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டு புல்மோட்டை நோக்கி பயணிக்கும் வியாபாரி குறிப்பிட்டார்.

கிரவல் பாதையினால் துயரம் 

பாதையின் முழு நீளத்திற்கும் பயணிக்க முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக நிரம்பிப் பரவிக் காணப்படுகின்றது.

கிரவல் போடப்பட்டு இருந்த இந்த வீதி தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் பாதையூனூடான போக்குவரத்தினால் பாரியளவிலான சேதத்திற்குள்ளாகி இருக்கின்றது.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி | Pulmottai Road Issue

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரிருந்து இன்றுவரை கிரவல் வீதியாக இப்பாதை இருப்பதாக இப்பாதையின் பக்கங்களில் நெற் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

சிங்கள மக்கள் வாழும் கிராமத்திற் கூடாக செல்லும் இந்தப் பாதையினை அதிகளவில் பயன்படுத்தும் மக்களில் தமிழர்களே அதிகம் இருப்பதாக திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவினூடாக தினமும் பயணித்து வரும் வியாபாரியொருவர் தன்னுடைய அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.

முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக அமையும் பாதையின் ஒரு பகுதியாக இது இருக்கின்றது.

பல வருடங்களாக திருத்தியமைக்காது இருக்கும் இந்த பாதை ஏன் இதுவரை கவனத்திற்கெடுக்கப்படாது இருக்கின்றது என்ற வினாவுக்கு துறைசார் அதிகாரிகளுக்கிடையே பொறுப்பு வாய்ந்த பதில்களை பெறமுடியவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஜனகபுரம் மேற்குச்சந்தி பிள்ளையார்

முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதி முழு நீளத்திற்கும் காபைற் இடப்பட்டுள்ளது. முல்லைதீவு - கொக்கிளாய் வீதியில் இருந்து மணலாறு செல்லும் வீதியும் காபைற் வீதியாக இருக்கின்றது.

மணலாற்றுப் பாதையில் இருந்து ஜனகபுரம் மேற்குச்சந்தி பிள்ளையார் கோவில் சந்தியில் இருந்து திரும்பி புல்மோட்டைக்கு பயணிக்கும் போது சிறிது தூரம் பயணித்ததும் கிரவல் பாதை ஆரம்பமாகின்றது.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி | Pulmottai Road Issue

தென்னமரவடிச் சந்தியில் இருந்து 3 கிலோமீற்றர் முல்லைத்தீவு பாதையில் கிரவல் பாதை உள்ளது. இது பயணிக்க முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளது என்றால் இலகுவாக புரிந்துகொள்ள முடியும் என திருகோணமலை முல்லைத்தீவு பேருந்து நடத்துனர் ஒருவர் குறிப்பிட்டார்.

பேருந்து பயணத்தின் போது பயணிகள் பெருமளவுக்கு அசௌகரியங்களை சுமப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வாழைப்பழ வியாபாரிகள், பேருந்துப் பயணிகள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள்,உந்துருளி பயணிகள் என பலரும் பயன்படுத்தி வரும் இந்த வீதியை விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி

வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்றது

ஈழநிலம் என குறிப்பாக உணர்த்தும் வடக்கையும் கிழக்கையும் இணைத்துக் கொள்ளும் குறுகிய தூர பயணப்பாதையாக இது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைக்கப்படாது இருக்கும் பாலத்தினால் நீண்ட தூரம் பயணித்து (சுமார் 25 கிலோமீற்றரிலும் கூடிய தூரம்) புல்மோட்டையை அடையும் நிலையில் பயணப்படும் மக்கள் தங்களின் பயணப் பாதையில் நீண்ட நாட்களாக திருத்தப்படாது இருக்கும் கிரவல் பாதையினை திருத்தித் தரக்கோரிய போதும் உருப்படியான மாற்றங்கள் இல்லை என கொக்குத்தொடுவாயில் இருந்து தொன்னமரவடிக்கு உறவினர் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று வரும் முதியவர் தான் பட்டு வரும் துயரினைக் குறிப்பிட்டார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி | Pulmottai Road Issue

பாராமுகமாக இருக்கும் இந்த இப்படியான பாதைகளை திருத்தி மக்களின் பயணங்களை இலகு படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளும் கவனமெடுக்காது கடந்து போவதனை எப்படி எடுத்துரைப்பது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாற்றங்கள் வருமா

மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சுமக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் காட்டிவரும் அக்கறை தொடர்பில் அதிருப்தியினை சமூக வியட ஆய்வாளர்கள் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

தேர்தல் கால பரப்புரைச் செலவுகளில் கொஞ்சத்தினை இப்படியான சவால்களை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்தினால் பயனடையும் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்களா என்ன என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்களை சவால்களோடு வாழ வைத்து அரசியல் செய்யும் போக்கு நிலவுகின்றதா?என்ற கேள்வியை எழுப்ப தோன்றுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

விரைவில் இந்த கிரவல் பாதை பயணத்திற்கு ஏற்றவகையில் திருத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US