அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி

Mullaitivu Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Apr 16, 2024 10:32 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

புல்மோட்டை நோக்கிய பயணத்திற்கான வீதியொன்றில் பயணிக்கும் பயணிகள் பாரிய போக்குவரத்துச் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பகுதிகளில் புல்மோட்டை வீதியின் துயரமும் ஒன்றாகித் தொடர்வதாக அந்த பாதையினை பயன்படுத்தி வரும் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

புல்மோட்டை வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிக்கும் போது தென்னமரவடிக்கு திரும்பும் சந்தியில் இருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் திசையில் திரும்பி 3 கிலோமீற்றர் தூரம் கிரவல் பாதைவழியே பயணிக்க வேண்டியுள்ளது.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி | Pulmottai Road Issue

இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் முல்லைத்தீவில் இருந்து பயணிக்கும் பயணிகள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும திடீர் மரணம்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும திடீர் மரணம்

வீதியபிவிருத்தித் திணைக்களம் இது தொடர்பில் காட்டிவரும் அக்கறையற்ற போக்கு மக்களுக்காக என உள்ள அரசாங்கத்தின் மீது கோபம் எழுவதாக ஜனகபுரம், சப்பத்நுவர பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டு புல்மோட்டை நோக்கி பயணிக்கும் வியாபாரி குறிப்பிட்டார்.

கிரவல் பாதையினால் துயரம் 

பாதையின் முழு நீளத்திற்கும் பயணிக்க முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக நிரம்பிப் பரவிக் காணப்படுகின்றது.

கிரவல் போடப்பட்டு இருந்த இந்த வீதி தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் பாதையூனூடான போக்குவரத்தினால் பாரியளவிலான சேதத்திற்குள்ளாகி இருக்கின்றது.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி | Pulmottai Road Issue

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரிருந்து இன்றுவரை கிரவல் வீதியாக இப்பாதை இருப்பதாக இப்பாதையின் பக்கங்களில் நெற் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

சிங்கள மக்கள் வாழும் கிராமத்திற் கூடாக செல்லும் இந்தப் பாதையினை அதிகளவில் பயன்படுத்தும் மக்களில் தமிழர்களே அதிகம் இருப்பதாக திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவினூடாக தினமும் பயணித்து வரும் வியாபாரியொருவர் தன்னுடைய அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.

முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக அமையும் பாதையின் ஒரு பகுதியாக இது இருக்கின்றது.

பல வருடங்களாக திருத்தியமைக்காது இருக்கும் இந்த பாதை ஏன் இதுவரை கவனத்திற்கெடுக்கப்படாது இருக்கின்றது என்ற வினாவுக்கு துறைசார் அதிகாரிகளுக்கிடையே பொறுப்பு வாய்ந்த பதில்களை பெறமுடியவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஜனகபுரம் மேற்குச்சந்தி பிள்ளையார்

முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதி முழு நீளத்திற்கும் காபைற் இடப்பட்டுள்ளது. முல்லைதீவு - கொக்கிளாய் வீதியில் இருந்து மணலாறு செல்லும் வீதியும் காபைற் வீதியாக இருக்கின்றது.

மணலாற்றுப் பாதையில் இருந்து ஜனகபுரம் மேற்குச்சந்தி பிள்ளையார் கோவில் சந்தியில் இருந்து திரும்பி புல்மோட்டைக்கு பயணிக்கும் போது சிறிது தூரம் பயணித்ததும் கிரவல் பாதை ஆரம்பமாகின்றது.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி | Pulmottai Road Issue

தென்னமரவடிச் சந்தியில் இருந்து 3 கிலோமீற்றர் முல்லைத்தீவு பாதையில் கிரவல் பாதை உள்ளது. இது பயணிக்க முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளது என்றால் இலகுவாக புரிந்துகொள்ள முடியும் என திருகோணமலை முல்லைத்தீவு பேருந்து நடத்துனர் ஒருவர் குறிப்பிட்டார்.

பேருந்து பயணத்தின் போது பயணிகள் பெருமளவுக்கு அசௌகரியங்களை சுமப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வாழைப்பழ வியாபாரிகள், பேருந்துப் பயணிகள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள்,உந்துருளி பயணிகள் என பலரும் பயன்படுத்தி வரும் இந்த வீதியை விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி

வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்றது

ஈழநிலம் என குறிப்பாக உணர்த்தும் வடக்கையும் கிழக்கையும் இணைத்துக் கொள்ளும் குறுகிய தூர பயணப்பாதையாக இது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைக்கப்படாது இருக்கும் பாலத்தினால் நீண்ட தூரம் பயணித்து (சுமார் 25 கிலோமீற்றரிலும் கூடிய தூரம்) புல்மோட்டையை அடையும் நிலையில் பயணப்படும் மக்கள் தங்களின் பயணப் பாதையில் நீண்ட நாட்களாக திருத்தப்படாது இருக்கும் கிரவல் பாதையினை திருத்தித் தரக்கோரிய போதும் உருப்படியான மாற்றங்கள் இல்லை என கொக்குத்தொடுவாயில் இருந்து தொன்னமரவடிக்கு உறவினர் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று வரும் முதியவர் தான் பட்டு வரும் துயரினைக் குறிப்பிட்டார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி | Pulmottai Road Issue

பாராமுகமாக இருக்கும் இந்த இப்படியான பாதைகளை திருத்தி மக்களின் பயணங்களை இலகு படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளும் கவனமெடுக்காது கடந்து போவதனை எப்படி எடுத்துரைப்பது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாற்றங்கள் வருமா

மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சுமக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் காட்டிவரும் அக்கறை தொடர்பில் அதிருப்தியினை சமூக வியட ஆய்வாளர்கள் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

தேர்தல் கால பரப்புரைச் செலவுகளில் கொஞ்சத்தினை இப்படியான சவால்களை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்தினால் பயனடையும் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்களா என்ன என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்களை சவால்களோடு வாழ வைத்து அரசியல் செய்யும் போக்கு நிலவுகின்றதா?என்ற கேள்வியை எழுப்ப தோன்றுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

விரைவில் இந்த கிரவல் பாதை பயணத்திற்கு ஏற்றவகையில் திருத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US