பூஜித், ஹேமசிறிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு உள்ளடங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலளார் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றும் உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடமை தவறி செயற்பட்டதாகவும், கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டதாகவுமே இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூவர் அடங்கிய உயர் நீதிமன்றில் இன்று குறித்த இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இருவருக்கும் எதிராக தலா 855 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் சுமார் 1215 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 22ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
