முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் புதுவை பண்பாட்டுப் பெருவிழா
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை இலண்டன் கிளை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள புதுவை பண்பாட்டுப் பெருவிழாவிற்கான போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்விழாவான் இறுதி நிகழ்வு, எதிர்வரும் 06.04.2024 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி. எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் இந்திய துணைத்தூதூவர் சாய் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கலைஞர்களுக்கான பல்வேறு போட்டி
இந்நிலையில், இந்த புதுவை பண்பாட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட கலைஞர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், போட்டி நிகழ்வுகளின் ஆரம்ப நாளான 30 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் மாலைக்கு வாதாடிய மைந்தன் கூத்துப் போட்டி இடம்பெற்றுள்ளது.
மேலும், நாட்டார் பாடல், கும்மி , தனி நடனம், பாடல் போட்டிகளும் இடம்பெற்ற அதேவேளை 31 ஆம் திகதி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வளாகத்தில் பேச்சு போட்டி, சொற்சமர் சதுரங்க போட்டி உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த போட்டிகளில் வெற்றி மீட்டும் கலஞர்களின் கலை நிகழ்வுகள் புதுவை பண்பாட்டுப் பெருவிழாவில் அரங்கேற்றப்படுவதோடு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : சண்முகம் தவசீலன்





இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam