இலங்கை விரைவில் உலகில் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும்
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமைய இலங்கை விரைவில் முற்றாக பிராந்திய வல்லரசுகள் மற்றும் உலகின் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்கு மத்தியில் சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டத்திற்கு எதிராக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டப்படும் போது அரசாங்கம் என்ன கூறியது.
இலங்கையின் இறையாண்மைக்காக மனித உரிமை உட்பட மக்களின் உரிமைகள் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அரசாங்கம் கூறியது.
ஏப்ரல் மாதம் என்ன கூறியது. வெளிநாட்டு முதலீடுகளுக்காக இறையாண்மையை அர்ப்பணிப்பதாக கூறியது.
மிக விரைவில் இலங்கை முற்றாக இந்து சமுத்திரத்தில், உலகில் பலமிக்க பிராந்திய ஏகாபத்திய நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam