மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், சில நிபந்தனைகளின் கீழ் பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாகவும், சுகாதார நடைமுறைகளோடு அழைத்து செல்வது என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகள் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய அழைத்து செல்லப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் மாகாணங்களுக்கு இடையேயான சேவையில் தனியார் பேருந்துகளும் ஈடுபட முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், 200,000 ரூபாவிற்கு அதிகமான மானியம் வழங்க தனியார் பேருந்து சங்கங்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam