கொழும்பில் எரிபொருள் இன்மையால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் (Video)
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காததால் பொது மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (18) மாலை கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நேற்று இரவில் இருந்து எரிபொருளுக்காக காத்திருந்துள்ளனர்.
இவ்வாறு காத்திருந்தும் இன்று எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்தமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.