யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறப்பு
கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்தது.
நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழி காட்டுதலுக்கு இணங்க இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை, மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் ஏனைய பொதுச் சந்தைகள் இன்றைய தினம் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
சந்தைகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் பொலிசார், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam