ஒட்டுசுட்டான் பொதுமயானம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தல்

Mullaitivu Thurairajah Raviharan
By Shan Jul 04, 2025 10:41 AM GMT
Report

முல்லைத்தீவு  - ஒட்டுசுட்டான் நகரை அண்டியபகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மயானக்காணி மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரிய 25 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரால் இதன்போது உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (03.07.2025) இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

யாழில் 22 வயது ரஜனியை விட்டு வைக்காத ஆறு இராணுவம் - யாருக்கும் தெரியாத பரம இரகசியம்

யாழில் 22 வயது ரஜனியை விட்டு வைக்காத ஆறு இராணுவம் - யாருக்கும் தெரியாத பரம இரகசியம்

ஒட்டுசுட்டான் பொதுமயானம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தல் | Public Cemetery And Irrigation Department

ரவிகரன் கருத்து

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25 ஏக்கர் காணிகளையும், அதனோடு இணைந்த பொது மயானத்தையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள மக்கள் இறந்தவர்களின் உடலங்களை பேராறு பொதுமயானத்திற்கு நீண்டதூரம் கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை காணப்படுகின்றது.

இவ்வாறாக பலவழிகளிலும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பப்படுத்துகின்ற நிலமைகளே காணப்படுகின்றன. இந்த நிலமை மாற்றப்படவேண்டும்.

ஒட்டுசுட்டான் பொதுமயானம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தல் | Public Cemetery And Irrigation Department

உடனடியாக ஒட்டுசுட்டான் நகர் பகுதியை அண்மித்துள்ள இராணுவமுகாம் அகற்றப்பட்டு பொதுமயானக்காணி உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25 ஏக்கர் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கைக்கு வந்த பயணி - விமான நிலையத்தில் ஜெக்கெட்டை கழற்றியதால் நேர்ந்த கதி

இலங்கைக்கு வந்த பயணி - விமான நிலையத்தில் ஜெக்கெட்டை கழற்றியதால் நேர்ந்த கதி

நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் கருத்து

இதன்போது நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் சந்திப் பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த வகையில் தற்போது ஒட்டுசுட்டானில் இயங்கி வரும் நீர்ப்பாசன பிரிவு அலுவலகம் விவசாய திணைக்களத்திற்குரிய காணியிலேயே அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

குறிப்பாக முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிறீஸ்கந்தராசா குறித்த நீர்ப்பாசன திணைக்களத்திற்குரிய காணி விடுவிப்பு விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டார்.

ஒட்டுசுட்டான் பொதுமயானம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தல் | Public Cemetery And Irrigation Department

அந்த வகையில் தற்போது ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்கள பிரிவு அலுவலகம் அமைக்கப்படுவதற்கு முன்னர், உரிய இராணுவ அதிகாரிகளுடன் பேசி பிரதான வீதியுடன் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25 ஏக்கர் காணிகளிலிருந்து முதற்கட்டமாக இரண்டு ஏக்கர் காணிகளையாவது விடுவித்துத் தரும்படி கோரியிருந்தார்.

இவ்வாறாக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உரிய காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமயானக்காணி மற்றும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய காணி என்பன அரசாங்கத்தால் விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி

தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US