கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொது மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி, பிரமுகர் முனையத்திலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விடுத்துள்ளார்.
இனிமேல், விசேட வரப்பிரசாதம் பெற்ற உயரதிகாரிகள் மாத்திரமே குறித்த முனையத்தின் வழியாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்பட சாதாரண மக்கள் முனையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானம் நிறுத்துமிடத்திற்கு சென்று விசேட விருந்தினர்கள் யாரையாவது வரவேற்க வேண்டுமானால், விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் அல்லது மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam