பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும்: அமைச்சர் விடுத்த எச்சரிக்கை
நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக எந்தவொரு கடுமையான சட்ட நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்கப் போவதில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
தேவைப்பட்டால் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தியாவது குற்றவாளிகள் சிறையிலடைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டின் எந்தப் பகுதியிலும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட அரசாங்கம் இடமளிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இனங்களுக்கிடையே அல்லது மதங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்த யாராவது முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சட்டம் பாயும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்காக இருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி அவர்கள் சிறையிலடைக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவாளிகளை நீண்டகாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், தடுப்புக்காவல் உத்தரவுகளை பிறப்பித்து அவர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள் என அமைச்சர் கடுந்தொனியில் எச்சரித்துள்ளார்.
யாராவது நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றால், அதற்காக உள்ள சட்டங்களின் கீழ் அவர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டுமானால் அதுவும் பயன்படுத்தப்படும். தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமானால், அதையும் செய்து அவர்களைச் சிறையில் அடைப்போம் என அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri