மாகாண சபை முறைமை மலையக மக்களுக்கே நன்மை பயக்கும்: சி.வி.கே.சிவஞானம் (photos)
மாகாண சபை முறைமையால் தமிழர்களுக்கு நன்மையென கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் உண்மையில், இது மலையக மக்களுக்கே நன்மை பயப்பதாக வடமாகாண சபை முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு யாழ். இந்திய துணைத்தூதரக அனுசரனையுடன், இலங்கைவாழ் இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல் உற்சவம் நேற்று (19.03.2023) ஸ்ரீதுர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், மலையக மக்களின் கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு மாகாண சபை முறைமையால் வாய்ப்புகள் ஏற்படும்.
மலையக மக்களுக்கான சாதகமான நிலைமை
மாகாண சபை முறைமை என்பது தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கள் வெளியிடப்படுவருகின்றது.
இதற்கு தமிழ்த் தேசிய பிரச்சினை காரணமாக அமைந்துள்ளது.
ஆனால், இது மலையக மக்களுக்கான சாதகமான நிலைமைகளை கொண்டுள்ளது நிலையில் மலையக
மாணவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும்
என அவர் குறிப்பிட்டுள்ளார்.





