மாகாண சபை தேர்தல் தொடர்பான தெரிவுக்குழு விவகாரம் காலத்தை கடத்தும் நாடகம்! சபா குகதாஸ் குற்றச்சாட்டு
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்த அரசாங்கமானது தெரிவு குழு விடயத்தை கொண்டு வருவது ஒரு காலத்தை கடத்துகின்ற நாடகம் என ரெலோ கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(8.1.2026)அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கமானது மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பான தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலமாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ளது.
மாகாண சபை தேர்தல்
உண்மையிலேயே இந்த அரசாங்கமானது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக தெரிவுக் குழுவை நியமிப்பது என்பது ஒரு அவசியமற்ற விடயம்.ஏனெனில் இந்த அரசாங்கமானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ளது.

உண்மையிலேயே மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால் இந்த அரசாங்கம், 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 17ஆம் இலக்க சட்டத்தை மாற்றியமைத்து உடனடியாக பழைய முறை மூலம் தேர்தலை நடாத்த முடியும்.அவ்வளவு அதிகாரமும் பலமும் இந்த அரசிடம் உள்ளது.
தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்
அநுர அரசாங்கம்
இந்த தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அநுர அரசாங்கத்துக்கு விருப்பம் இல்லாத காரணத்தினாலேயே இந்த தெரிவு குழுவை கொண்டு வருகின்றது.

கடந்த காலத்தில் முரண்பாடாக இருந்த அந்த எல்லை நிர்ணயம் என்ற விடயத்தை மீண்டும் கொண்டு வந்து காலத்தை இழுத்தடிக்கின்ற நோக்கத்தில் தான் இந்த தெரிவுக்குழு விடயத்தை பிரேரணை மூலமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வருகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.