அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது - விமல் வீரவங்ச
மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதியில் கட்டாயம் நடத்தப்படும் என அரசாங்கம் கூறினாலும் தேர்தலை நடத்தும் இயலுமை கிடைக்காது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் புதிய தேர்தல் முறை தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
அந்த சட்டத்திற்கான வரைவை உருவாக்க வேண்டும். தொகுதிகளைத் தீர்மானிப்பது தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கக் காலத்தை வழங்க வேண்டும்.
அந்த சட்ட வரைவு சட்டமா அதிபரின் கைகளுக்குச் சென்று, மீண்டும் அமைச்சரவைக்கு வந்தவுடன் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
இப்படியான நடைமுறைகளை நிறைவு செய்ய நீண்டகாலம் தேவை. இதனால், இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை என வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
