அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது - விமல் வீரவங்ச
மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதியில் கட்டாயம் நடத்தப்படும் என அரசாங்கம் கூறினாலும் தேர்தலை நடத்தும் இயலுமை கிடைக்காது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் புதிய தேர்தல் முறை தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
அந்த சட்டத்திற்கான வரைவை உருவாக்க வேண்டும். தொகுதிகளைத் தீர்மானிப்பது தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கக் காலத்தை வழங்க வேண்டும்.
அந்த சட்ட வரைவு சட்டமா அதிபரின் கைகளுக்குச் சென்று, மீண்டும் அமைச்சரவைக்கு வந்தவுடன் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
இப்படியான நடைமுறைகளை நிறைவு செய்ய நீண்டகாலம் தேவை. இதனால், இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை என வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 22 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam