நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் (Photos)
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இடமாற்றம் செய்யப்படவுள்ளநிலையில் யாழ். மாவட்டத்திற்கு புதிதாக அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் குறித்த புதிய அரசாங்க அதிபரை யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்க வேண்டாம் என தெரிவித்து சிவசேனை அமைப்பினரால் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் முன்றலில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "சிவத் துரோகிகள் தமிழ் இனத் துரோகிகள்" உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை
தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (30.12.2022) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை தெல்லிப்பழை பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செய்தி: தீபன்
கிளிநொச்சி
கிளிநொச்சி - தொண்டமான் நகர் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதை கண்டித்து இன்று(30-12-2022) வாயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தொண்டமான் நகரில் அமைந்துள்ள பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு பெருமதி வாய்ந்த இரண்டு மடிகணினிகள் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களும் ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தை கண்டித்து கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தின் முன்பாக கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் வயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் பொது அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: யது, தமிழ்செல்வன், கஜிந்தன்
வவுனியா
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30.12) இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் 'ராஜபக்ச குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசாங்கத்துடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்நுறுத் தா, வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபனந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே' என கோசங்களையும் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: திலீபன், ராகேஷ்
யாழ். வலிகாமம்
யாழ். வலிகாமம் வடக்கு கட்டுவன் மேற்கு கிராம சேவையாளர் அலுவலகம் ஒரு
வருடத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று முறை தாக்கப்பட்டு ஆவணங்கள் எரியூட்டபட்டு
சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு உரிய தரப்பினர் தொடர்ச்சியாக அசமந்த போக்கை காட்டி வருகின்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய இலங்கை கிராம சேவையாளர் சங்கம் வலிகாமம் வடக்கு ஏற்பாட்டில் வலிகாமம் வடக்கு கிராம சேவையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது சேவைக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் வலிகாமம் வடக்கு கிராம சேவையாளர்கள் இணைந்து இப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
செய்தி: தீபன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam