ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் பெண்களின் போராட்டம்! கடும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை

United Nations Afghanistan Rishi Sunak
By Jenitha Dec 22, 2022 06:41 PM GMT
Report

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்த தலிபானின் உத்தரவுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இங்கிலாந்து, அமெரிக்காவும் கண்டித்துள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர்.

தலிபான்களின் ஆட்சி 

அதேவேளையில், ‘கடந்த முறையை போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும்’ என்று உறுதியளித்தனர். ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை.

ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் பெண்களின் போராட்டம்! கடும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை | Protests As Taliban Shut Universities To Women

தற்போது, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் ஆப்கன் அரசின் உயர்கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை உயர்கல்வி அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜியாவுல்லா ஹாஷிமி உறுதி செய்தார்.

தாலிபன் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்.

இதன்போது மூன்று பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தகார் மாகாணத்திலும் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து. நேற்று புதன்கிழமை நூற்றுக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

கடந்த ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண் கல்வியை கட்டுப்படுத்தும் அண்மைய கொள்கை இதுவாக அமைந்துள்ளது. நாட்டின் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பெண்கள் ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிய தடையை விதித்த தாலிபான்கள் அரசுக்கு எதிராக  ஆப்கானிஸ்தான் பெண்கள் ஹிஜாப் அணிந்து காபூலின் தெருக்களில் அணிவகுத்து செல்வதையும், பதாகைகளை உயர்த்தி கோஷங்களை எழுப்புவதையும் காட்டுகிறது.

இந்த குழு முதலில் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான காபூல் பல்கலைக்கழகத்தின் முன் கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது, ஆனால் அதிகாரிகள் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்களை அங்கு நிறுத்தியமையால், இடம் மாற்றப்பட்டது.

சில சிறுமிகளும், பெண் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் 

பொது இடங்களுக்கு ஆண் துணையின்றி செல்லக்கூடாது. உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு தடை,  இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் திரைச்சீலை கொண்டு மாணவர்களையும் மாணவிகளையும் பிரிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 

இவை ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக வெடித்து போல ஆப்கனில் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை மெல்ல சூடுபிடிக்க தொடங்கின.

ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் பெண்களின் போராட்டம்! கடும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை | Protests As Taliban Shut Universities To Women

இப்படி இருக்கையில் இந்த புதிய தடை பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நங்கர்ஹார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாலிபன் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில் தாலிபன் அரசின் இந்த முடிவு கடும் பேரழிவை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் நிலோபர் பயத் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் உட்பட உலக நாடுகள் கண்டனம் 

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நேற்று கூறும்போது, “ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கல்வியில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. பெண்கள் கல்வி கற்காமல் ஒரு நாடு எவ்வாறு வளர்ச்சியடையும்” என்று கவலை தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் பெண்களின் போராட்டம்! கடும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை | Protests As Taliban Shut Universities To Women

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘மகள்களுக்கு தந்தையாக, அவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு வழங்க நிறைய இருக்கிறது. அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நுழைய அனுமதி மறுப்பது மிக பெரிய பின்னடைவாகும்’ என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
மரண அறிவித்தல்

இணுவில், Toronto, Canada

08 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US