காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கை வைத்ததன் எதிரொலி! ரணில் அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுத்த அதிர்ச்சி

Manusha Nanayakkara Ranil Wickremesinghe Sri Lanka Politician President of Sri lanka Sri Lankan political crisis
By Chandramathi Jul 25, 2022 03:29 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் தனது முடிவை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது.

எனினும் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைதியான போராட்டங்கள், வன்முறையாக மாறியமையே இந்த தாமதத்துக்கான காரணம் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர் இழந்த தொழில் வாய்ப்புக்கள்

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கை வைத்ததன் எதிரொலி! ரணில் அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுத்த அதிர்ச்சி | Protestors International Monetary Fund Ranil

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”போராட்டங்கள் காரணமாக, கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்யவிருந்த உலக உணவு திட்டத்தின் தலைவர், தனது பயணத்தை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.

இலங்கையில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதன் காரணமாக, கிளர்ச்சியாளர்களை விரும்பாத நிலையில், இலங்கையர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காமல் போயுள்ளன. அவை ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே இன்று இலங்கைக்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமாதானமுமே தேவை. கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்கள் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தால், அவர்கள் நிராயுதப்படுத்தப்படுவார்கள்.

புதிய அரசியலமைப்பு

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கை வைத்ததன் எதிரொலி! ரணில் அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுத்த அதிர்ச்சி | Protestors International Monetary Fund Ranil

இதேவேளை அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வந்து எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படும்.

அத்துடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" என கூறியுள்ளார்.

காலிமுகத்திடல் தாக்குதல்

கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையில், மறுநாள் காலையில் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் மற்றும் பொலிஸார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது.

இதன்போது பலர் காயமடைந்திருந்தனர். சர்வதேச ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேச நாடுகள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்ததுடன், இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் ஜப்பான் தனது அனைத்து உதவிகளையும் வழங்காமல் நிறுத்தும் என்று ஜனாதிபதி ரணிலிடம் நேரடியாக அதன் தூதுவர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்க தூதுவரும் தனது கண்டனத்தை உடனடியாக வெளியிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

You My Like This Video


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Thusis, Switzerland

28 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US