எரிவாயு இல்லை என்று போராட்டம்! களத்தில் இறங்கிய பொலிஸார் (Video)
வத்தளை - நீர்கொழும்பு பிரதான வீதியில் எரிவாயு வழங்குமாறு கோரி பொதுமக்கள் வீதிக்கிறங்கி இன்று மாலை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எரிவாயு வழங்கும் நிலையத்தில் இருந்து பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கும் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து குறித்த பகுதியில் பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கப்படுகின்றது, இதன் காரணமாக பொதுமக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
எனினும் இன்று மாலையுடன் எரிவாயு வழங்குவதை குறித்த நிலையம் நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எரிவாயு நிலையத்தில் இருந்து பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கும் பணியினை முன்னெடுத்துள்ளனர்.
அதன் பிறகு எரிவாயு பெற்றுக் கொண்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறிச் சென்றமை எமது கமராக்களில் பதிவானது.

என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan