எரிவாயு இல்லை என்று போராட்டம்! களத்தில் இறங்கிய பொலிஸார் (Video)
வத்தளை - நீர்கொழும்பு பிரதான வீதியில் எரிவாயு வழங்குமாறு கோரி பொதுமக்கள் வீதிக்கிறங்கி இன்று மாலை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எரிவாயு வழங்கும் நிலையத்தில் இருந்து பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கும் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து குறித்த பகுதியில் பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கப்படுகின்றது, இதன் காரணமாக பொதுமக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
எனினும் இன்று மாலையுடன் எரிவாயு வழங்குவதை குறித்த நிலையம் நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எரிவாயு நிலையத்தில் இருந்து பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கும் பணியினை முன்னெடுத்துள்ளனர்.
அதன் பிறகு எரிவாயு பெற்றுக் கொண்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறிச் சென்றமை எமது கமராக்களில் பதிவானது.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri