ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஐ.மக்கள் சக்தி மேற்கொண்டுள்ள நடவடிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Rmanayakke) தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகடை சிறைச்சாலைகளுக்கு எதிரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்க கோரி, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்காது இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில் ஆர்ப்பாட்டத்திற்காக ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் செய்திகளை அனுப்ப ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, உடல் உபாதை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதுடன் வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.