புளியம்பொக்கனை நாகேந்திரா வித்தியாலயத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புளியம்பொக்கனை நாகேந்திரா வித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(4) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை
இதன்போது, வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடாத்தப்பட்டது.
மேலும் ,வலயக்கல்வி அதிகாரிகள் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் மாணவர்களும் வகுப்பறைக்கு செல்லாது நுழைவாயிலில் காத்திருந்தனர்
குறித்த இடத்திற்கு கிளிநொச்சி வடக்கு வலய திட்டமிடல் பிரதிக்கல்விப்பணிப்பாளர் வருகை தந்து பெற்றோர்களுடன் கலந்துரையாடி விடுமுறை நிறைவடைந்ததும் ஆசிரியர் வெற்றிடம் நிரப்புவதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.




குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri