ஹிஷாலினியின் உயிரிழப்புக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்
ஹிஷாலினியின் உயிரிழப்புக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பாரதிபுரம் சூசைபிள்ளை கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது.
பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் ஆகிய கிராம மட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, "பள்ளி செல்ல வேண்டிய ஒரு பாலகியை உன் வீட்டில் வேலைக்கு வைத்துவிட்டு நல்லாட்சி செய்தாயோ?", "அரசே சிறுமியின் சாவுக்குத் தீர்வு எங்கே?" , "யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்", "பெண் அடிமையின் உச்சம் ஒரு பாலகியின் மரணம்" உள்ளிட்ட கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தி சுமார் 3O நிமிடங்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.