மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம் (Photos)
வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்தினால் வெளியேறி தற்போது மீள் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வவுனியா மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்பாக இன்று (01.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை மேற்கொண்டிருந்த நிலையிலேயே வவுனியா, போகாஸ்வேவ பகுதியினை சேர்ந்த மக்களினால் இந்த போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் வடக்கு கிழக்கில் இருந்த சிங்கள மக்களை படுகொலையும் செய்திருந்தனர். அவற்றிலிருந்து தப்பித்து சென்ற சிங்கள மக்கள் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீள்குடியேறிருந்தனர்.
வாக்காளர் இடாப்பு சிக்கல்
எனினும், வடகிழக்கில் மீள்குடியேறிய தமிழ் மற்றும் முஸ்ஸிம் மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்கள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வழங்கப்பட்டிருந்த போதிலும் மீள் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு அரசாங்கம் எவ்வித அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் வவுனியா போகாஸ்வேவ பகுதியிலுள்ள மக்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகம் என்பன வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் வாக்காளர் இடாப்பு அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
நல்லிணக்கம் என தெரிவிக்கும் ஜனாதிபதி வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை
மாத்திரம் புறக்கணிப்பது ஏன்? எமக்கு அடிப்படை வசதிகள், விவசாய காணிகள்,
வாக்காளர் இடாப்பு போன்ற அடிப்படை வசதிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள
வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.









பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
