பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
எரிபொருள் போக்குவரத்து பவுசர்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
30 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் பவுசர் ஒன்றுக்கு தீ வைக்க முற்பட்ட நிலையிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே எரிபொருள் போக்குவரத்து பவுசர்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.





Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
