ரம்புக்கனை சம்பவம் - மைத்திரி கடும் கண்டனம் (PHOTO)
ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு முதல் தாம் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருட காலப்பகுதியில் நிராயுதபாணிகளான எந்தவொரு பொதுமக்களுக்கும் தோட்டாக்களால் பதிலளிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தனது குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ரம்புக்கனையில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மைத்திரிபால சிறிசேனவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam