மாத்தறை நகரிலும் அமைதியின்மை - பொலிஸார் குவிப்பு (Video)
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருடிக்கடி காரணமாக நேற்றைய தினம் எரிபொருள் விலை மீளவும் அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
நாட்டில் பல இடங்களிலும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், ரம்புக்கனை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தற்போது மாத்தறையிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
