லண்டனில் பெரும் போராட்டம்! - 13 பேர் கைது, பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை
கோவிட் - 19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக மத்திய லண்டனில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பொலிஸாருக்கும், போராட்டகார்களுக்கும் இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊகடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் வரையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கோவிட் விதிமுறைகளை மீறயமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாத பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மெட் பொலிஸார் கருத்து வெளியிடுகையில், “15.45 மணி வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளத கூறியுள்ளனர். கோவிட் விதிமுறைகளை மீறியமைக்காகவே பெருமனவான கைதுகள் இடமபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதால், மத்திய மான்செஸ்டர் வழியாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கோவிட் - 19 வைரஸ் முடக்கல் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறும், பொது மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
